கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

 பங்குனிப் பெருந்திருவிழா

பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள மாரியம்மன் கோயில்களில் புதுகோட்டை கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பழைமையும், சிறப்பும் பெற்றதாகும். இக்கோயில் பங்குனிப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். நிகழாண்டுக்கான பங்குனித் திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இதில், பொன்னமராவதி, ஆலவயல்,கண்டியாநத்தம், உலகம்பட்டி, கொன்னைப்பட்டி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும் மற்றும் ஊர்வலமாகவும் பூத்தட்டு, பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்துவந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். விழாவில், கொடையாளர்கள் மற்றும் சேவை சங்கங்கள் சார்பில் ஆங்காங்கே தண்ணீர்பந்தல் அமைத்து, பக்தர்களுக்கு 4 நீர்மோர், பானகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரகபோக்குவரத்துக்கழகம் சார்பில் புதுக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் தலைமையிலான போலீஸார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ம. ஜெயா மற்றும் பூஜகர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து திங்கள்கிழமை அக்னி பால் விழா நடைபெற உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story