மொழிபோர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்

மொழிபோர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்

குமாரபாளையம் மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தப்பட்டது.


குமாரபாளையம் மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே சமூக ஆர்வலர்களால் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பு, அதனை மறைக்கும் விதமாக, நேற்று மாலை ஒப்பந்ததாரர் கூறியபடி, பயணியர் நிழற்கூட பராமரிப்பு பணிகள் நடந்தன. இது குறித்து தகவலறிந்த மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் அமைப்பாளர்கள் பெருமளவில் ஒன்று சேர்ந்தனர். நகராட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்ட பின், அந்த பணிகள் நிறுத்தப்பட்டது. ஒப்பந்ததாரர் கூறியதை, பணியாளர்கள் தவறாக புரிந்து கொண்டு, மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் முன்பு, அதனை மறைக்கும் விதமாக கட்டுமான பணி செய்ய துவங்கினர் என்பது தெரியவந்தது. இதன் பின் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story