ஓலைப்பாடியில் பாமக சார்பில் களப்பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

ஓலைப்பாடியில்  பாமக சார்பில் களப்பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

ஓலைப்பாடியில் பாமக சார்பில் களப்பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

2024 வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி வேப்பூர் ஒன்றியம் ஓலைப்பாடி ஊராட்சிக்குட்பட்ட வேப்பூர், கல்லை , ஓலைப்பாடி காரைப்பாடி ,

ஆகிய வாக்கு சாவடிகளுக்கான களப்பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் அரியலூர் - பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த அமைப்பு தலைவர் வழக்கறிஞர் தங்கதுரை தலைமையில்பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபு வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் க. செந்தில்குமார். முன்னாள் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் செல்ல. ரவி ஆகியோர் கலந்து கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி கொடி மற்றும் வன்னியர் சங்க கொடியினை ஏற்றி வைத்து, சிறப்புரையாற்றனார்.

இக்கூட்டத்தில் ஓலைப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர் .

Tags

Next Story