வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
 கடையநல்லூர் அருகே வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கடையநல்லூர் அருகே வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுலைமான், பொருளாளர் பாக்யராஜ் முன்னிலை வகித்தனர். செயலாளர் நவாஸ்கான் வரவேற்றார். கடையம், பொட்டல்புதூர் நகருக்குள், கனிமவள வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும், சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வியாபாரிகளும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story