அரூரில் 1.65 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் !

அரூரில் 1.65 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் !

பருத்தி

அரூர் வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், 1.65 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அரூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பருத்திக்களை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம் அந்த வகையில் நேற்று இ-நாம் மூலம் பருத்தி ஏலம் நடந்தது. இதில், 15 விவசாயிகள், 24 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில்,ஆர். சி.எச்., ரகம் குவிண்டால், 7,026 முதல், 7,496 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 24 குவிண்டால் பருத்தி, 1.65 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story