சித்தாமூர் அருகே மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழப்பு

சித்தாமூர் அருகே மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழப்பு

பசு உயிரிழப்பு

சித்தாமூர் அருகே மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழப்பு. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சித்தாமூர் அருகே போந்துார் கிராமம் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 55. இவர், பசு மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். வழக்கம் போல, நேற்று பசுவை மேய்ச்சலுக்காக அருகே உள்ள வயல்வெளி பகுதிக்கு அழைத்து சென்ற போது, சாவித்திரி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், மின் மோட்டார்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யும் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டின் கால் மின் கம்பிகள் மீது பட்டதில், மின்சாரம் பாய்ந்து, பசு சம்பவ இடத்திலேயே பலியானது. இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, மின் கம்பிகள் சீரமைக்கப்பட்டன. விபத்து குறித்து, சக்திவேல் சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story