விபத்து ஏற்படுத்தும் வேகத்தடைகள் - அடையாளம் இல்லாததால் ஆபத்து

விபத்து ஏற்படுத்தும் வேகத்தடைகள் - அடையாளம் இல்லாததால் ஆபத்து

வேகத்தடைகளில் அடையாளம் இல்லாததால் ஆபத்து

புதுக்கோட்டை மாவட்டம், வெங்களமேடு பகுதியில் வேகத்தைடையில் வெள்ளைநிற பெயிண்ட் அடையாளம் தெரியாததால் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதுகை- பொன்னமராவதி சாலையில் வெங்களமேடு பகுதியில் 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் வேகத்தடையில் வெள்ளைநிற பெயிண்ட் அடிக்கப்படவில்லை மேலும் இந்த பகுதியில் சிக்னல் விளக்குகள் மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

2 நாட்களுக்கு முன் இந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக கடந்த போது தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர். இதை தவிர்க்க வேக தடைகளின் அருகில் எச்சரிக்கை பலகை, ஒளிரும் விளக்குகள் அமைத்திட நெடுஞ்சாலைத்துறை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story