கடன் தொல்லை: வாலிபர் தற்கொலை!

கடன் தொல்லை: வாலிபர் தற்கொலை!

காவல்துறை விசாரணை


திருமயம் அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஒனாங்குடியை சேர்ந்தவர் அருண்பாண்டியன்(27). திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. மது அருந்தும் பழக்கம் உள்ள அருண்பாண்டியன் பலரிடம் கடன் வாங்கியிருந்தார். அசல் மற்றும் வட்டியை செலுத்தாத நிலை யில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். இதனால் விரக்தியடைந்த அருண்பாண்டியன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரிமளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story