நாட்றம்பள்ளி அருகே கடன் தொல்லை: மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை

நாட்றம்பள்ளி அருகே கடன் தொல்லை: மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை

கோப்பு படம் 

நாட்றம்பள்ளி அருகே கடன் தொல்லையால் மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே. பந்தாரப்பள்ளி குதுவமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி சரோஜா இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண் பிள்ளைகள் உள்ளன. சரோஜா சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நபர்களிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இதன் காரணமாக இதற்கு முன்பு ஒரு முறை கடன் தொல்லையால் மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததன் காரணமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4 இலட்சம் செலவு செய்து அவருடைய மகன்கள் காப்பாற்றியுள்ளனர். இந்த நிலையில் அதே போல் கடன் தொல்லை அதிகமாக,

நேற்று மணமுடைந்த சரோஜா வீட்டின் அருகே உள்ள குமரேசன் என்பவருடைய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறைகளுக்கு தகவல் கிடைத்ததன் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் கிணற்றில் விழுந்த சரோஜாவின் உடலை மீட்டு நாட்றம்பள்ளி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கு முன்பே தற்கொலைக்கு முயன்று மகன்கள் 4 லட்சம் ரூபாய் செலவு செய்து காப்பாற்றிய நிலையில் தற்போது சரோஜா மீண்டும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story