கல்லறைதோட்டம் அமைக்க தீர்மானம்: கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி

கல்லறைதோட்டம் அமைக்க தீர்மானம்: கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி

கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி


குமாரபாளையத்தில் கல்லறை தோட்டம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றிய நகராட்சி தலைவருக்கு கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் கிறிஸ்துவ சமுதாய மக்களுக்கு கல்லறை தோட்டம் அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

நேற்றுமுன்தினம் நடந்த குமாரபாளையம் நகர் மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணனை, நடராஜா நகர் புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்கு தந்தை பெஞ்சமின், கவுன்சிலர் ஜேம்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து பாராட்டி, நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story