திமுக அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் !

திமுக அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் காந்தி சிலை முன்பு, பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட செயலாளர் இளம்பை இரா தமிழ்ச்செல்வன் தலைமையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருட்கள் பழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு திமுக கட்சிக்கு எதிராக கேஷமிட்டு , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிமுக பெரம்பலூர் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கிளைகழக நிர்வாகிகள், தொண்டர்கள், என திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story