கள்ளக்குறிச்சி ஓட்டு என்னும் மையத்தில் டிஐஜி ஆய்வு

கள்ளக்குறிச்சி ஓட்டு என்னும் மையத்தில் டிஐஜி ஆய்வு

கள்ளக்குறிச்சி ஓட்டு என்னும் மையத்தை டிஐஜி ஆய்வு செய்தார்.


கள்ளக்குறிச்சி ஓட்டு என்னும் மையத்தை டிஐஜி ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையத்தை டி.ஐ.ஜி., பார்வையிட்டு ஆய்வு செய்தார் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), ஆத்துார் (தனி), கெங்கவல்லி (தனி), ஏற்காடு (எஸ்.டி.,) ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இந்த தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையம் சின்னசேலம் அடுத்த அ.வாசுதேவனுார் மகாபாரதி பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் நிலையில், அங்கு கட்டடங்களில் உள்ள ஜன்னல்கள் அடைக்கப்பட்டு 'ஸ்ட்ராங் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது. இதனை டி.ஐ.ஜி., திஷாமிட்டல் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு, சட்டசபை தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் அறைகள், ஸ்ட்ராங் ரூம், பாதுகாப்பு ஏற்பாடுகள், தற்காலிக கழிவறைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமய்சிங்மீனா, சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story