திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன்

திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன்

திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி

இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் கிரிக்கெட் தொடர் போட்டியில் திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் கிரிக்கெட் தொடர் போட்டியின் சீசன் 2 கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது.கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற லீக் ஆட்டங்களை தொடர்ந்து, நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. சென்னையை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் காரைக்குடி சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இதில், முதலில் களம் இறங்கிய திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 112 ரன்கள் எடுத்தது. 114 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய காரைக்குடி சூப்பர் கிங்ஸ் அணி 12 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.இதையடுத்து, திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story