தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் திடலில் நடைபெற்ற வரும் தேர்தல் திருவிழா தேசத்தின் திருவிழா விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா என்ற இரண்டாம் நாள் விழிப்புணர்வு கண்காட்சியை தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் மைதானத்தில் நடைபெற்றது இதனை தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப., நேற்று இரவு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மகளிர் திட்ட இயக்குனர் பத்ஹூ முகம்மது நசீர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, வட்டாட்சியர் ஜெயசெல்வன் உள்ளிட்ட மகளிர் சுய உதவி குழுவினர், தன்னார்வலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story