பெரம்பலூரில் காவலர் சேமநல உதவி தொகை வழங்கிய மாவட்ட எஸ்.பி.

பெரம்பலூரில் காவலர் சேமநல உதவி தொகை வழங்கிய மாவட்ட எஸ்.பி.

சேமநல நிதி வழங்கிய எஸ்பி

பெரம்பலூரில் காவலர் சேமநல உதவி தொகையை மாவட்ட எஸ்பி வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினரின் குழந்தைகளுக்கு காவலர் சேமநல உதவி தொகை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல்துறையினரின் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் 12 -ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததற்கும்,

அவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கும் உதவியாக காவலர் சேமநலநிதி உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் மேற்படி மாணவர்களிடம் வழங்கினார்கள். இதன்படி மாணவர்களின் மேற்படிப்பிற்கு உதவி தொகை வழங்குவதன் மூலம் மாணவர்கள் உத்வேகத்துடன் படிக்கவும் அவர்களின் கல்வியை மேம்படுத்தவும் உதவும் வகையில் காவலர் சேமநலநிதி உதவித் தொகையை வழங்கினார்கள்.

Tags

Next Story