சொல்லாத பல நல்ல திட்டங்களையும் நிறைவேற்றியது தான் திமுக - முரசொலி

சொல்லாத பல நல்ல திட்டங்களையும் நிறைவேற்றியது தான் திமுக - முரசொலி
திமுக தேர்தல் பிரசாரம் 
தி.மு.க அரசு சொன்னதை மட்டும் அல்ல, சொல்லாத பல நல்ல திட்டங்களையும் நிறைவேற்றிய அரசு என தஞ்சாவூரில் நடந்த தேர்தல் பரப்புரையின் போது திமுக வேட்பாளர் முரசொலி தெரிவித்தார்.

தஞ்சையில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தஞ்சாவூர் எம்பி பழனிமாணிக்கம், எம்எல்ஏ நீலமேகம், மேயர் சண் ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் திமுக வேட்பாளர் முரசொலி பேசியது: என்னை பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவர்கள் தொலைபேசி மூலம் தகவல் கூறினால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளேன். தஞ்சை தொகுதியில் வேளாண் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் . இப்போது தஞ்சையில் ஐடி பார்க் கட்டப்பட்டு வருகிறது.

இதற்கான பணியை விரைவில் முடித்து தஞ்சையை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவேன். தொகுதி முழுவதும் எம்பி அலுவலகம் அமைத்து பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன். தி.மு.க அரசு சொன்னதை மட்டும் அல்ல, சொல்லாத பல நல்ல திட்டங்களையும் நிறைவேற்றிய அரசு. எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்" இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Read MoreRead Less
Next Story