திமுகவினர் மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு

திமுகவினர் மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு

உறுதிமொழி ஏற்பு 

திருப்பத்தூரில் மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் நடந்த மத நல்லிணக்க உறுதி மொழி நாள் நிகழ்ச்சியில் முச்சமய சான்றோர்கள், திமுகவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சின்னகடைதெரு பகுதியில் உள்ள தனியார்திருமண மண்டபத்தில் மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் மதநல்லிணக்க உறுதி மொழி நாள் நிகழ்ச்சி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிருத்துவ போதகர்கள், இஸ்லாமியர்கள், இந்து சன்னியாசிகள் என பலர் பங்கேற்றனர். இதில் அன்பை வாழ்க்கை அறநெறியாக கொண்டும் மனிதநேயத்தை நடைமுறை வாழ்க்கையாக கொண்டு வாழ்வேன். அனைத்து உயிரும் ஒன்றென்று நினைத்து அனைத்து மக்களையும் அரவணைத்து செல்வேன், மத வெறியை விலக்கி மத நல்லிணக்கம் பேணுவேன், மக்கள் ஒற்றுமையே மானுடத்தின் வளமும் நலமும் என்பதை மனதில் வைத்தே என்னாலும் உழைப்பேன், என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், பலரும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story