ராசிபுரம்: மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை

ராசிபுரம்: மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை

தற்கொலை

மன அழுத்தம்‌ காரணமாக ராசிபுரத்தில் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோகோரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி, 26, எம்பிபிஎஸ்., எம். டி., முடித்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டாக மன அழுத்தம்‌ இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், தீடீரென வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் உடல் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எம்பிபிஎஸ்., மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story