ராசிபுரம் அருகே கிணற்றில் 2நாளாக போராடிய நாய்: பத்திரமாக மீட்பு

ராசிபுரம் அருகே கிணற்றில் 2நாளாக போராடிய நாய்: பத்திரமாக மீட்பு

நாய் மீட்பு

ராசிபுரம் அருகே 40 அடி ஆழக்கிணற்றில் இரண்டு நாளாக போராடிய நாயை பத்திரமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆனைக்கட்டிபாளையம் கொசவன் காடு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (70). இவருக்கு சொந்தமான 40 அடி ஆழமும், அதில் 5 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் 2 நாட்களுக்கு முன்பு சுமார் 4 வயதுடைய நாய் விழுந்தது. இந்த நிலையில், தண்ணீர் திறந்து விட லோகநாதன் மோட்டார் அருகே சென்றார்.

அப்போது, கிணற்றில் இருந்து நாய் சத்தமிடும் சத்தம் கேட்டது. உடனடியாக, ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு லோகநாதன் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 40 அடி ஆழக் கிணற்றில் பம்பு செட் அருகே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்டனர்.

Tags

Next Story