செங்கோட்டை பகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி வாக்கு சேகரிப்பு

செங்கோட்டை பகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

செங்கோட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர்டாக்டர் கிருஷ்ணசாமி வாக்கு சேகரிப்பு
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். செங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியரையில் தேர்தல் பிரச்சாரத்தை டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று துவக்கினார். தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செக். கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா முன்னிலையில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது: நான் கடந்த 1996ம் ஆண்டு முதல் இந்த பகுதியில் தான் இருந்து வருகிறேன். உங்களுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் நிறை வேற்றி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டு உங்கள் வாழ்வு வளம் பெற உறுதுணையாக இருப்பேன். நூறு நாள் வேலைத் திட்டத்தை உறுதி செய்து அதன் சம்பளத்தை உயர்த்தி வழங்க அயராது பாடுபடுவேன். இது வெற்று வாக்குறுதி இல்லை, உறு மொழி பத்திரம் என்று தெரிவித்தார். புளியரை, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, பெரியப்பிள்ளை வலசை, பண்பொழி, மேக்கரை, வடகரை, அச்சன்புதூர், சிவராம பேட்டை, அகரக்கட்டு, ஆய்க்குடி, சாம்பவர் வடகரை, வேலாயுதபுரம், பொய்கை, உள்ளிட்ட பகுதிகளில் டாக்டர் கிருஷ்ணசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story