குடிநீர் குழாய் உடைப்பால் குடிநீர் வீண்! நிரந்தர தீர்வு காண கோரிக்கை

குடிநீர் குழாய் உடைப்பால் குடிநீர் வீண்! நிரந்தர தீர்வு காண கோரிக்கை

குடிநீர் குழாய் உடைப்பு 

குடிநீர் குழாய் உடைப்பால் குடிநீர் வீண்! நிரந்தர தீர்வு காண கோரிக்கை.
விராலிமலை கடைவீதியில் காவிரி குடிநீர் குழாய்உடைப்பால் பேருந்து நிலையம் முன்பு குளம் போல் தேங்கி நின்ற குடிநீர். விராலிமலையில் அண்மைக்காலமாக காவிரி குடிநீர் குழாயில் ஏற்படும் தொடர் உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விராலிமலை கடைவீதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே புதுக்கோட்டை செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாய் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து வெளியேறும் நீர் வீணாகி அருகில் உள்ள பேருந்து நிலையம் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்கள் சாலையை கடப்பதில் சிரமமான நிலை உள்ளது. எனவே, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிக நிரந்தரத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாகும்.

Tags

Read MoreRead Less
Next Story