பட்டாசு கடைகளில் டிஆர்ஓ ஆய்வு

பட்டாசு கடைகளில் டிஆர்ஓ ஆய்வு

ஆய்வு மேற்கொண்ட போது

கள்ளகுறிச்சி மாவட்டம், சங்கராபுரம் நகரில் உள்ள பட்டாசு கடைகளில் டி.ஆர்.ஓ., ஆய்வு மேற்கொண்டார்.

சங்கராபுரம் நகரில் பட்டாசு கடை வைத்திருப்பவர்கள் உரிமத்தை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்திருந்தனர். சங்கராபுரம் தாலுகா அலுவலகம் அருகே மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள பட்டாசு கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் ஆய்வு செய்தார்.

அப்போது கடையின் இரு புறமும் வழி உள்ளதா, தீயணைப்பான் மற்றும் தீயணைப்பு கருவிகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து, பட்டாசு இருப்பு விபரங்களை கேட்டறிந்தார். தாசில்தார் கோபாலகிருஷ்ணன், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் தசரதன், ஆர்.ஐ., கல்யாணி, வி.ஏ.ஓ., ஜெயலட்சுமி உடனிருந்தனர்.

Tags

Next Story