மயங்கி விழுந்த டிரைவர் உயிரிழப்பு.

அத்திப்பாளையம் அருகே நடந்து சென்ற போது, மயங்கி விழுந்த டிரைவர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமன் மகன் முத்துராஜ் வயது 35. இவர் டிரைவர் ஆக பணியாற்றி வந்தார். இவர் சரக்குகளை ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குப்பம் அருகே உள்ள அத்திப்பாளையம் கிராமத்தில் செயல்படும் வாட்சன் அக்ரோ என்ற தனியார் நிறுவனத்திற்கு டிசம்பர் 1 ஆம் தேதி சரக்குகளை ஏற்றிக் கொண்டு வந்துள்ளார். பின்னர், மாலை 4 மணி அளவில் முத்துராஜ் அந்த நிறுவனத்தின் உள்ளே நடந்து சென்ற போது, திடீரென எதிர்பாராத விதமாக மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முத்துராஜை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த முத்துராஜின் மாமனார் பழனியப்பன் வயது 50 என்பவர், இது குறித்து க.பரமத்தி காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, உயிரிழந்த முத்துராஜின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக க. பரமத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story