4 மாதங்களாக பூட்டப்பட்ட மின் மயானம்

4 மாதங்களாக பூட்டப்பட்ட மின் மயானம்
 மின் மயானம்
தென்காசி ஆயிரப்பேரி சாலையில் உள்ள நகராட்சி மின் மயானம் பராமரிப்பு பணிக்காக கடந்த 4 மாதங்களாக பூட்டப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து ஆயிரப்பேரி சொல்லும் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான மின் மயானம் செயல்பட்டு வருகிறது. இந்த மின்மயானம் பராமரிப்பு செய்வதாகக் கூறி கடந்த 4 மாதங்களுக்கு முன் பூட்டப்பட்டது. ஆனால் இன்று வரை சீரமைக்கப்படாமல் செயல்படாமல் உள்ளது. இதனால் 40 கி.மீட்டர் தூரத்தில் உள்ள புளியங்குடி மின்மயானத்திற்கு செல்லும் அவல நிலையால் ஏழை எளிய மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு உடனே மின் மயானத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story