மதுராந்தகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்

மதுராந்தகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்
 எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்
மதுராந்தகத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பேசுகையில், தொழிற்சாலைகள் இயங்குவது கேள்விக்குறியாக மாறி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நாம் தேர்தலை சந்திக்கிறோம். இது போன்ற தொழில்கள் பிரகாசமாக இருக்க வேண்டும் என்றால் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

இன்றைய தினம் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் தமிழ்நாட்டின் நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் வலிமையான கட்சி அதிமுகவாக உள்ளது. தீய சக்தி திமுக எனக் கூறி எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார் அன்றிலிருந்து இன்று வரை திமுக தீய சக்தியாக உள்ளது. பாஜகவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் அவர்களே உதயநிதி ஸ்டாலின் அவர்களே. நாங்கள் ஒன்றும் கள்ளத்தொடர்பு வைக்க வேண்டிய விஷயம் இல்லை. அந்தப் பழக்க தோஷம் உங்களுக்கு இருப்பதால் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு கட்சி கூட்டணி வைத்து இருக்கிறது அதிலிருந்து பிழை வந்து விட்டோம் உங்களுக்கு ஏன் பொறாமை ஏற்படுகிறது. என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story