திருச்சியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம்

திருச்சியில்  எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம்
பைல் படம்
திருச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, 2வது முறையாக பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்

கடந்த மாதம் 24ம் தேதி திருச்சி வண்ணாங் கோவிலில் நடந்த அதிமுக பிரச்சார பொதுக்கூட் டத்தில், 40 லோக்சபா தொகுதிகளின் வேட்பா ளர்கள், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஆகியோரை அறிமு கப்படுத்தி பேசிய அக்கட்சியின் பொதுச் செய லாளர் பழனிசாமி, திருச்சி வேட்பாளர் கருப்பை யாவையும் தனியாக அறிமுகப்படுத்தினார்.

பின்னர், அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடு பட்டு வந்தனர். இந்நிலையில், 2வது முறையாக பழனிசாமி, இன்று திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சேலத்தில் இருந்து திருச்சி வரும் அவர், தென் னுார் உழவர்சந்தை மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருப்பையாவுக்கு ஓட்டு சேகரித்து பேசுகிறார். அதன்பின்னர், தஞ்சாவூரில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

Tags

Read MoreRead Less
Next Story