ஊத்தங்கரை வருகை புரிந்த எடப்பாடி பழனிச்சாமி

ஊத்தங்கரை  வருகை புரிந்த எடப்பாடி பழனிச்சாமி

நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஊத்தங்கரை வருகை தந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதிக்கு வருகை புரிந்த அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வரவேற்கும் பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் நேரில் வராமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூரில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று பிறகு மதியம் 2 மணி அளவில் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திரி விருந்தினர் மாளிகைக்கு முன்னாள் முதல்வர் எடபாடி பழனிச்சாமி அவர்கள் வருகை புரிந்தார்.

தர்மபுரி மாவட்டத்தின் அருகாமையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக துணை பொது செயலாளர் கேபி முனுசாமி அவர்களை விழாவிற்கு அழைப்பு விடுக்காததை தொடர்ந்து கேபி முனுசாமி அவர்களின் சொந்த மாவட்டமாக உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கட்சி பொறுப்பாளர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிகழ்வு கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் முதல்வர் எடபாடி பழனிச்சாமி உடன் முன்னாள் மந்திரிகள் 01)கே.பி.அன்பழகன் 02)எஸ் பி வேலுமணி 03)தங்கமணி 04)கருப்பண்ணன் 05)செங்கோட்டையன் அரூர் சட்டமன்ற உறுப்பினர் 06)சம்பத் MLA ஆகியோர் வருகை புரிந்தனர்.

இதில் கே.பி முனிசாமி ஆதரவாளர்கள் ஊத்தங்கரை தெற்கு ஒன்றிய செயலாளர் திரு வேடி மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் வேங்கன், ஊத்தங்கரை பகுதியில் தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற தொகுதியை வென்ற நிலையில் தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் TMதமிழ்செல்வம் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story