பஸ் நிலையத்தில் முதியவர் பிணம் மீட்பு

பஸ் நிலையத்தில் முதியவர் பிணம் மீட்பு

சடலம் மீட்பு 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பஸ் நிலையத்தில் முதியவர் பிணம் மீட்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காத்திருப்போர் கூடத்தில் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து செய்யாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story