தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர் மூங்கில்துறைப்பட்டில் பரபரப்பு

தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர் மூங்கில்துறைப்பட்டில் பரபரப்பு

தேர்தல் புறக்கணிப்பு

தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர் மூங்கில்துறைப்பட்டில் பரபரப்பு.
மூங்கில்துறைப்பட்டு தேவி நகரில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து போஸ்டர் ஒட்டியும், வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மூங்கில்துறைப்பட்டு தேவி நகரில் கனிக்கர் வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளுக்கு ஜாதிச் சான்று வேண்டி பலமுறை கலெக்டர் மற்றும் வருவாய்த் துறையினரிடம் மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கனிக்கர் குடும்பத்தினர் நேற்று மூங்கில்துறைப்பட்டில், ஜாதிச் சான்று வழங்காததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க போவதாக போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும், வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த வி.ஏ.ஓ., முருகன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags

Read MoreRead Less
Next Story