வாக்குப்பதிவு மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

பாராளுமன்றத் தேர்தல் பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா, தேர்தல் செலவின பார்வையாளர் அசோக்குமார்,மாநகராட்சி கமிஷனர் பவன்குமார்ஜி கிரியப்பனவர் ஆகியோர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிக்கும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூரில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்- 204நடைபெற்று வருவதை முன்னிட்டு 18- திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பொதுப்பார்வையாளர் ஹிமான்சு குப்தா ,செலவின பார்வையாளர் அசோக்குமார் மற்றும் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார்ஜிகிரியப்பனவர் ஆகியோர் 42& 53 தட்டான் தோட்டம் கலைமகள் வித்யாலயா மற்றும் பாரபாளையம் நடுநிலைப் பள்ளியில் வாக்களிக்கும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் உதவி ஆணையாளர் வினோத், தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா உட்பட பலர் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story