நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

பைல் படம் 

விழுப்புரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய பைக்கில் ஊர்வலமாக வந்த நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்ய, நேற்று காலை பைக்கில் ஊர்வலமாக வந்தனர். மாவட்ட செயலர் செல்வம் (50)மாவட்ட தலைவர் முனுசாமி(46) உள்ளிட்டோர், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதற்காக, விழுப்புரம் காட்பாடி ரயில்வே கேட் பகுதியில் இருந்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வரை அவர்கள் பைக்கில் ஊர்வலமாக வந்தனர். இவர்கள் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக, விழுப்புரம் நகர வி.ஏ.ஓ., சதீஷ் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார், 27 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story