தேர்தல் விதிமீறல் : அதிமுகவினர் 200 பேர் மீது போலீசார் வழக்கு

தேர்தல் விதிமீறல் :  அதிமுகவினர் 200 பேர் மீது போலீசார் வழக்கு

காவல் நிலையம் 

விழுப்புரத்தில் அனுமதியின்றி கட்சி கொடிகள், பேனர்கள் வைத்ததாக அதிமுகவினர் 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
விழுப்புரத்தில் அதிமுக சார்பில் கரும்பு விவசாயி மண்டபத்தில், நேற்று மாலை தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்காக, அனுமதியின்றி அதிமுக சார்பில், 8 கொடி கம்பங்கள், 2 பேனர்கள் போன்றவை வைக்கப்பட்டு, கூட்டம் நடத்தியுள்ளனர். இது குறித்து, தேர்தல் பறக்கும்படை அலுவலர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், அதிமுக நகர செயலர் ராமதாஸ் உள்ளிட்ட 200 பேர் மீது, விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story