அதிக வளைவு ரயில் பாதை மின்மயமாக்குதல் பணிகள் நிறைவு

அதிக வளைவு ரயில் பாதை மின்மயமாக்குதல் பணிகள் நிறைவு

ரயில் பாதை மின்மயமாக்குதல் பணிகள் நிறைவு 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அதிக வளைவு ரயில் பாதை மின்மயமாக்குதல் பணிகள் நிறைவடைந்தன.
அதிக வளைவுகள் கொண்ட மலைப்பாதையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கேரள மாநில பகுதியான பகவதிபுரம் -எடமன் ரயில் நிலையங்களுக்கு இடையிலான 34.67 கிலோமீட்டர் தூர மின் மயமாக்குதல் பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த பகுதிகளை ரயில்வே அதிகாரிகள் நேற்று (பிப்.28) ஆய்வு செய்தனர். இதில் விரைவில் இங்கு ரயில் வெள்ளோட்டம் நடைபெறும் வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story