தேர்தல் நடத்தை விதிகள் அமல் - குறைதீர் கூட்டங்கள் ஒத்திவைப்பு

தேர்தல் நடத்தை விதிகள் அமல் - குறைதீர் கூட்டங்கள் ஒத்திவைப்பு

ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் திங்கள் கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.
பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடத்தை விதிகள் 16.04.2024 முதல் அமலுக்கு வந்துள்ளதால் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 18.03.2024 திங்கள்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரையில் நடைபெறாது என பொதுமக்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story