சட்டவிரோத மது விற்பனை - முன்னாள் ராணுவ வீரர் கைது

சட்டவிரோத மது விற்பனை - முன்னாள் ராணுவ வீரர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது

நித்திரவிளை அருகே 60 மது பாட்டில்களுடன் முன்னாள் ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகேதூத்தூர் கல்லூரி பின்புறம் ஒருவர் மது விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்திற்கு தக வல் கிடைத்தது. இதைய டுத்து தனிப்படை எஸ்ஐ ஜாண் போஸ்கோ, தனிப் பிரிவு ஏட்டு ஸ்டாலின் மற்றும் போலீசார்சம்பவ இடம் சென்று அவரை மடக்கி பிடித்தனர். விசா ரணையில் அவர் கொல்லங்கோடு அருகே கிராத்தூர் அடைச்சி விளாகம்பகுதியை சேர்ந்த ராஜகுமார் என்பதும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும் தெரிய வந்தது.அவரது வீட்டின் அருகே சோதனை செய்த போது 750 மி.லி அளவு கொண்ட 60 பாட்டில் மிலிட்டரி மது பறிமுதல் செய்யப்பட்டது. அவரை நித்திரவிளை காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்த னர். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story