குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு
அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் தொடர்ந்து பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலை முதல் குற்றாலம், செங்கோட்டை, கட்டளை குடியிருப்பு, குத்துக்கல் வலசை, இலஞ்சி, வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

மேலும் அருவிகளில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலாப் பயணிகள் ஆவலுடன் வந்த நிலையில் மெயின் அருவியில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவி கரையில் நின்று தண்ணீர் விழுவதை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சற்று குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்ப தற்கு அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story