சேலத்தில் தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டல் !

சேலத்தில் தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டல் !

பைல் படம்


சேலத்தில் தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த 3 நபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அருகே உள்ள கன்னங்குறிச்சி மதுரைவீரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26) தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று மதியம் கோவிலுக்கு சென்றுவிட்டு ஏற்காடு அடிவாரம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது குப்புசாமி (34), பூமிநாதன் (30), யுவராஜ் (33) செல்வம் (32) ஆகியோர் விக்னேஷிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். உடனே விக்னேஷ் கூச்சல் போடவே அருகில் உள்ளவர்கள் திரண்டதால் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு 3 பேரும் அங்கிருந்து சென்றனர். இது குறித்து விக்னேஷ் கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பூமிநாதன், யுவராஜ், செல்வம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story