கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி!

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி!
பைல் படம்
சேத்துப்பட்டு அருகே மரத்தில் இருந்து கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தெள்ளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 44), விவசாயி. இவர் கிணற்றின் அருகில் உள்ள மரத்தை ரம்பத்தால் அறுத்து கொண்டிருந்த போது திடீரென மரத்தில் இருந்து தவறி கிணற்றில் விழுந்தார். இதுகுறித்து சேத்துப்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி முருகனை பிணமாக மீட்டனர்.

Tags

Next Story