விவசாயிகள் குறைதீர் கூட்டம் பிப்.1 க்கு மாற்றம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்  பிப்.1 க்கு மாற்றம்

ஆட்சியர் கற்பகம் 

பெரம்பலூரில் இன்று நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற இருந்தது. ஆனால்“உங்களை தேடி, உங்கள் ஊரில்” திட்டமானது இன்று நடைபெற உள்ளதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்ரவரி 1ம் தேதி அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறும். இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மைகடன் உதவிகள், வேளாண்மை இடு பொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம்,வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story