இறுதி கட்ட பிரச்சாரம்; வாகன பேரணியை துவக்கி வைத்த எல்.முருகன்

இறுதி கட்ட பிரச்சாரம்; வாகன பேரணியை துவக்கி வைத்த எல்.முருகன்

பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று அன்னூரில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்து வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று அன்னூரில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்து வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தின் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று அன்னூரில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்து வாக்கு சேகரித்தார்.

பேரணி அன்னூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி குருக்கிலியாம்பாளையம், ஜெ.ஜெ நகர்,ஜீவா நகர்,பொகலூர்,குமரன் குன்று வழியாக சென்றது.சாலையோரம் இருந்த பொதுமக்களிடையே பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என கோஷமிட்டும் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருசக்கர வாகனத்தில் பாஜக கொடியை கட்டியபடி பேரணியாக சென்றனர்.அதில் எல்.முருகன் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே தாமரைக்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டு கொண்டார்.

இதில் பாஜகவினர் ஏராளமானவர்கள் திரளாக பங்கேற்றனர்.அன்னூரில் தொடங்கிய இருசக்கர வாகன பிரச்சாரம் மேட்டுப்பாளையம், குன்னூர்,கோத்தகிரி வழியாக சென்று உதகையில் முடிக்க உள்ளனர்.

Tags

Next Story