பட்டாசு ஆலை வெடிவிபத்து : ஆலை உரிமையாளர் மகன் கைது

பட்டாசு ஆலை வெடிவிபத்து : ஆலை உரிமையாளர் மகன் கைது

விபத்து நடந்த பட்டாசு ஆலை

சாத்தூர் அருகே பந்துவார்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்தில் ஆலை உரிமையாளர் மகனை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆலையின் உரிமையாளர் சகாதேவன் மற்றும் அவரது மகன் குருசாமி பாண்டியன் ஆகிய இருவர் மீது அஜாக்கரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, விபத்து ஏற்படும் என தெரிந்தே கவனக்குறைவாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில் மகன் குருசாமி பாண்டியன் கைது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்

Tags

Next Story