மலையடிப்பட்டியில் மீன்பிடி திருவிழா

மலையடிப்பட்டியில் மீன்பிடி திருவிழா

மீன்பிடி திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், மலையடிப்பட்டியில் நடைப்பெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதியை அடுத்த மலையடிப்பட்டி ஆண்டி கண்மாயில் கோடைக்கா லத்தை முன்னிட்டும், ஊர் மக்கள் ஒற்றுமைக்காக வும், நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் மீன்பிடி திருவிழா நடந்தது. மலையடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராமமக்கள் திரண்டு வந்து பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவற்றை கொண்டு மீன்பிடித்தனர். இதில், நாட்டு வகை மீன் களான கெளுத்தி, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் உள்ளிட்ட மீன்கள் சிக்கின. அவற்றை கிராமமக்கள் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story