மைலாப்பூரில் மீன்பிடி திருவிழா!

மைலாப்பூரில் மீன்பிடி திருவிழா!

மீன்பிடி திருவிழா

மைலாப்பூரில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே மைலாப்பூர் கிராமத்தில் உள்ள ஏம்பக்கண்மாயில் கோடைக்காலத்தை முன்னிட்டும், நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்கவும், ஊர்மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டியும் மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் மைலாப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமானோர் கண்மாயில் இறங்கி ஊத்தா, வலை ஆகியவற்றை கொண்டு மீன்பிடித்தனர். வலையில், நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை,விரால், அயிரை உள்ளிட்டவை சிக்கின. அவற்றை கிராம மக்கள் உற்சாகத்துடன் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story