வெள்ளத்தில் மூழ்கிய அரசு மாணவர் விடுதி

சூனாம்பேடு அரசு விடுதி வெள்ளத்தில் மூழ்கியதால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சூணாம்பேடு அரசு மாணவர் விடுதி உள்ளது. இங்கு 57 மாணவர்கள் தாங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக மழைநீர் விடுதி முழுவதும் சூழ்ந்துள்ளது. மேலும் விடுதி உள்ளே மழை நீரில் மிதந்து வந்து பாம்புகள் உள்ளதால் மாணவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story