சாயப்பட்டறை ஆலை கழிவு கலப்பால் நொய்யல் ஆற்றில் பொங்கிய நுரை

சாயப்பட்டறை ஆலை கழிவு கலப்பால்  நொய்யல் ஆற்றில் பொங்கிய நுரை

நொய்யல் ஆற்றில் நுரை 

நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறை ஆலைகளின் கழிவு நீர் கலப்பால் சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில் நுரை பொங்கி சாலையில் பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு திருப்பூர்,ஈரோடு மாவட்டங்கள் வழியாக காவிரி நதியில் கலக்கிறது.கோவை திருப்பூர்,ஈரோடு மாவட்ட உள்ள விவசாயிகளுக்கு நீராதாரமாக விளங்கும் நொய்யல் ஆற்றல் சாயக் கழிவுகள் கலந்து நொய்யல் ஆற்றில் மாசு ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கோவையில் பரவலான மழை பெய்து வந்த நிலையில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்ததால் சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில் நுரை படிந்து காணப்படுகிறது.நுரை படலங்கள் காற்றில் பறந்ததால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.சாயக்கழிவுடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து வருவதால் நொய்யல் ஆறு கருமை நிறமாக காட்சி அளிக்கிறது.இது போன்ற நிகழ்வுகள் நிகழ்வதால் இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story