குப்பைமேடான வானகரம்: மாவட்ட நிர்வாகம் அலட்சியம்

குப்பைமேடான வானகரம்: மாவட்ட நிர்வாகம் அலட்சியம்

குப்பை குவியல்

வானகரம் குப்பைமேடாக கட்சியளிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டு அருணாச்சலம் நகரில், பாரதி சாலை உள்ளது. இச்சாலை சென்னை மாநகராட்சி மற்றும் வானகரம் ஊராட்சியின் எல்லைப் பகுதியில் உள்ளது. போரூர், காரம்பாக்கம் பகுதிகளில் இருந்து வானகரம் மற்றும் போரூர் சுங்கச்சாவடி செல்ல, வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.

இச்சாலையில், வானகரம் ஊராட்சி எல்லையில், பிளாஸ்டிக், இதர குப்பை மற்றும் கழிவுகள் குவிக்கப்பட்டு உள்ளன. இந்த குப்பை முறையாக அகற்றப்படாததால், துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. அத்துடன் பிளாஸ்டிக் குப்பை காற்றில் பறப்பதால்,

இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சில சமூக விரோதிகள் பிளாஸ்டிக் குப்பையை எரிப்பதால், பகுதி மக்கள் மூச்சு திணறலால் அவதிப்படுகின்றனர். மாநகராட்சி, ஊராட்சி எல்லை தவிர, வானகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பல சாலைகளில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் குப்பை குவிந்துள்ளன. இது, வானகரம் ஊராட்சி எல்லையில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை முறையாக அமல்படுத்தாமல் ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதைக் காட்டுகிறது. எனவே, குவிக்கப்பட்டுள்ள குப்பையை முறையாக அகற்றவும், ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story