பிள்ளை தோப்பு கடற்கரையில் மாணவிகளை அலை இழுத்து சென்றது 

பிள்ளை தோப்பு கடற்கரையில் மாணவிகளை அலை இழுத்து சென்றது 
உயிரிழந்த சஜிதா
கன்னியாகுமரி மாவட்டம், பிள்ளை தோப்பு கடற்கரையில் மாணவிகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட நிலையில் ஒரு சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளி சந்தை அருகே மேல சங்கரன்குழியை சேர்ந்தவர் முத்துக்குமார் ஒரு மகள் சஜிதா என்பவர் ஆலங்கோட்டை அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த ரத்தினகுமார் மகள் தர்ஷினியும் படிக்கிறார்.

நேற்று மாலை சஜிதாவும் தர்ஷினியும் அருகில் உள்ள பிள்ளை தோப்பு மீனவர் கிராமத்தில் உள்ள தோழியை பார்க்க சென்றனர். பின்னர் மூன்று பேரும் கடற்கரைக்கு சென் 7னர். கடற்கரையில் கிடந்த பல வடிவிலான சிற்பிகளை பார்த்த மாணவிகள் சிற்பிகளை சேகரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ராட்சதலை ஒன்று அடித்ததில் இருவரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்த தோழி கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ள மீனவர்கள் ஓடி வந்து மாணவிகளை தேடினர்.

இது குறித்து குளச்சல் மரைன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் அஜிதா சடலமாக மீட்கப்பட்டார். தர்ஷினி மாயமானார். அவரை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story