உலக முதலீட்டாளர்கள் மாநாடு:சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேரடி ஒளிபரப்பு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு:சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேரடி ஒளிபரப்பு

நேரடி ஒளிபரப்பு பார்த்த அதிகாரிகள்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை பெருக்கிடும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது.

2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சேலம் மாவட்ட மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், சமூக ஊடகங்கள், யூடியூப், மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூர் தொலைக்காட்சிகள், மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு திரைகள் மற்றும் அதிநவீன வீடியோ மின்னணு வாகனம் உள்ளிட்டவைகள் மூலமும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Tags

Next Story