அரசு பஸ் கண்ணாடி உடைப்பு போதை ஆசாமி அட்டகாசம் !

சங்ககிரியில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு போதை ஆசாமி அட்டகாசம் போலீசார் விசாரணை.
சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய பேருந்து நிலையத்திற்கு கோவையிலிருந்து சேலம் செல்லும் அரசு பேருந்தினை ஓட்டுனர் முருகேசன் ஒட்டி வந்துள்ளார். இந்தப் பேருந்தில். நாமக்கல் மாவட்டம் வெப்படை பேருந்து நிறுத்தத்தில் இருந்து போதை ஆசாமி ஒருவர் ஏறி உள்ளார். அவர் வரும் வழியில் ஓட்டுனரை பேருந்தை மெதுவாக ஓட்ட சொல்லி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே சங்ககிரி பழைய பேருந்து நிலைத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளும் ஓட்டுனர் முருகேசனும் குடிபோதையில் இருந்த பயணியை இறக்கி விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி பேருந்தில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் விசாரணையில் போதை ஆசாமி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகர் பகுதி சேர்ந்த கூலித் தொழிலாளி சுந்தரராஜன் என்பதும் இவர் குடிபோதையில் சேலத்திற்கு வேலைக்கு செல்வதற்காக வெப்படை பகுதியில் அரசு பேருந்தில் ஏறி ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது.மேலும் இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து போதை ஆசாமியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கண்ணாடி உடைந்த பேருந்தை சங்ககிரி காவல் நிலையம் முன்பு நிறுத்திவிட்டு போலீசார் மாற்று பேருந்து ஏற்பாடு செய்து பயணிகளை சேலத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்ததோடு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Read MoreRead Less
Next Story