தேர்வு பயத்தில் அரசு பள்ளி மாணவர் தற்கொலை
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனையடுத்து அவரது மனைவி தேன்மொழி (36), மகனுடன் வந்து ராசிபுரம் நகர வங்கித் தெருவில் வசித்து வருகிறார். இவர் தனியார் ஜவுளி கடையில் பணியாற்றியும் வருகிறார். இவரது மகன் நவீன்சாமி (15) ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், தாய் தேன்மொழி குடும்ப நிலையை சுட்டிக்காட்டி நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை கூறி வந்தாராம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பொதுத்தேர்வு பயத்தில் இருந்த நவீன்சாமி வீட்டில் தூக்கிட்டு் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து தகலவறிந்த ராசிபுரம் போலீஸார் சம்பவ இடம் சென்று பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் வீட்டில் யாரும் இல்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.